search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"

    • விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த விஜய் எறும்புகளை அழிக்க பயன்படுத்தும் டர்பண்ட் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபோதைக்கு அடிமையான ராஜேசை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
    • மனவேதனை அடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவொற்றியூர்:

    மணலி, பி.ஆர்.கே. சர்மா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). தொழிலாளி. இவருக்கும் உறவினர் பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் ராஜேசுக்கு குடிப்பழக்கம் அந்த திருமணம் நடைபெறவில்லை. உறவினர் பெண் வேறு ஒருவரை திருமணம் செய்த கொண்டார்.

    பின்னர் மதுபோதைக்கு அடிமையான ராஜேசை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அந்த மையத்தில் இருந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்த ராஜேஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
    • அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    புதுச்சேரி:

    புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.

    இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவரது மனைவி நித்யா. தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நந்தகுமார் நேற்று மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நந்தகுமாரை, நித்யா திட்டியுள்ளார். இதனால் மணமடைந்த நந்தகுமார் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த கலவை போலீசார் விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

    • மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
    • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு 3 குழந்தைகளுடன் பெற்ேறார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). இவர் மீது சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் அண்மையில் இவர் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அங்கிருந்தவாறு அவர் அந்த பகுதியில் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது சஞ்சய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அதில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

    • படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரேணுவை பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி தாப்ரி பகுதியில் உள்ள வைசாலி காலனியில் வசித்து வருபவர் கோயல்.கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ரேணு கோயல் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    ரேணுகோயல் தினமும் அங்குள்ள ஒரு ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்று வந்தார்.

    அப்போது அதே ஜிம்முக்கு வந்த ஆஷித் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரேணுகோயல் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அந்த சமயம் ஆஷித் அங்கு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஆஷித் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேணுவை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் ஆஷித் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரேணுவை பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது பற்றி அறிந்ததும் தாப்ரி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினார்கள்.

    சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஆஷித் உருவம் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி அருகில் இருந்த அவரது வீட்டுக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், அப்போது வீட்டு மொட்டைமாடியில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அஷித் இறந்து கிடந்தது தெரியவந்தது. ரேணுவை சுட்டுக்கொன்று விட்டு வீட்டுக்கு வந்த அவர் தானும் அதே துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆஷித்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது பெற்றோருடன் அவர் வசித்து வந்தார்.

    அவர் ஏன் ரேணுவை சுட்டுக்கொன்றார் என்பது மர்மமாக உள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
    • மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் பூண்டி முதல் தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் அலெக்ஸ்பாண்டி(23). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ்பாண்டி தேவதானப்பட்டியில் உள்ள தனது அண்ணன்வீட்டிற்கு வந்தார். நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே விஷம்குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது32) பெயின்டர. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

    குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 முறை தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    வேலுார்:

    சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் முன்னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி சொர்ணலதா. தம்பதியினருக்கு லோகேஷ் (21) உட்பட 3 மகன்கள் உள்ளனர்.

    லோகேஷ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்தார்.

    இதற்கிடையில் அவரது தம்பி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்துக்கு தேர்வு பெற்றார்.

    ஆனால் லோகேஷ் 3 முறை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டும் தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

    இதனால் விரக்தியடைந்த லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
    • பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×